திருவேங்கடம்: திருவேங்கடத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. நிர்வாகி லயன்ஸ் பால்ராஜ் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்கத்தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஈரோட்டில் மாநில அளவில் நடைபெறும் 40வது வணிகர் சங்க மாநாட்டில் திருவேங்கடத்தில் இருந்து திரளாகப் பங்கேற்பது. மேலும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர், சங்கரப்பன், ரங்க சரவணன், முருகன், பாலன், ரங்கம் ஆகிய 6 பேர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் மாநாடு சென்றுவருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.