அரூர், மார்ச் 7: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம், கடந்த 1ம் தேதி நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதனை பாவலர் முருகேசன் தொடங்கி வைத்தார். குமாரசாமிபேட்டை பிரதோஷ வழிபாட்டு திருவாசக திருக்குழுவை சேர்ந்த இந்துமதி தலைமையில், வளர்மதி உள்ளிட்ட 35 மகளிர் சிவனடியார்கள், இசைக்கருவிகளை இசைத்து கொண்டு திருவாசகத்தை ஓதினர். இதற்கான ஏற்பாடுகளை கவிபேரரசு கம்பன் கழக தலைவர் செவ்வேள் முருகன் செய்திருந்தார்.