வானூர், பிப். 10: விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையில் சந்திரமவுளீஸ்வரர் மற்றும் வக்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தை மாத அமாவாசை ஜோதி தரிசனம் நேற்று நடந்தது. இதனையொட்டி காலையில் வக்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனையடுத்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது, அதையடுத்து பகல் 12 மணிக்கு வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் நடந்தது. இதில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவக்கரை கோயிலில் அமாவாசை ஜோதி தரிசனம்
previous post