Friday, April 26, 2024
Home » திருமணமான பெண் உள்பட 2 பேர் மாயம்

திருமணமான பெண் உள்பட 2 பேர் மாயம்

by Karthik Yash

தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாது. இவரது மகள் பொற்கொடி (24). பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 31ம் தேதி இரவு, வீட்டில் தூங்கிய மாணவி, மறுநாள் காலையில் காணவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மாரண்டஅள்ளி இபி காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனியார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி(27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம், வீட்டில் இருந்த ஜோதி திடீரென மாயமானார். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

11 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi