திருப்பூர், ஏப்.13: திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று காந்திநகர், இ.பி.காலனி பகுதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் நாசர் அலி முன்னிலை வகித்தார். முகமது அப்துல் கனி பிரார்த்தனை நிறைவேற்றினார். தொடர்ந்து, நோன்பிருந்த இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி மற்றும் இதர உணவு பொருட்கள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி, மாமன்ற உறுப்பினர் குமார், மங்கலம் மதிமுக நிர்வாகி பாபுசேட், பசீர் அகமது, 28 வது வார்டு ம.தி.மு.க பிரதிநிதி அப்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராயபுரம் பகுதி கழக பொருளாளர் அப்துல் மஜீத் நன்றி கூறினார்.
திருப்பூரில் மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
previous post