திருப்புவனம், மார்ச் 22: திருப்புவனத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாடு முழுதும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 7கட்டங்களாக நடக்கவுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி நடைபெறுகிறது. வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் திருப்புவனத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி தாசில்தார் விஜயகுமார் தலைமையில் நடந்தது.
தேர்தல் துணை தாசில்தார் உமா, மண்டல துணை தாசில்தார் ராமநாதன், வருவாய் ஆய்வாளர்கள் முத்து முருகன்,வீரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு பெண்கள் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணியில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு கோஷங்களை கூறியவாறு சென்றனர்.