Wednesday, May 15, 2024
Home » திருப்பதி கோயில் எதிரே காலணியுடன் புகைப்படம் எடுத்த விவகாரம்!: மன்னிப்பு கோரினார் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன்..!!

திருப்பதி கோயில் எதிரே காலணியுடன் புகைப்படம் எடுத்த விவகாரம்!: மன்னிப்பு கோரினார் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன்..!!

by kannappan

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே காலணி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோவிலுக்கு எதிரே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் காலணி அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்தது எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இவர்கள் இருவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கோயில் முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். புகைப்படம் எடுக்கும் அவசரம் காரணமாக தானும், நயன்தாராவும் காலணி அணிந்திருந்ததை உணரவில்லை என்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். கடவுளுக்கு எந்த அவமரியாதையையும் செய்யவில்லை என்றும் தங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். …

You may also like

Leave a Comment

one + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi