காரைக்கால்,நவ.19: திருப்பட்டினம் அரசு பள்ளியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை நாக. தியாகராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார். காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சமீபத்தில் பெய்த மழையில் பள்ளி வகுப்பறையில் கட்டிட பகுதிகள் சேதமடைந்து இருப்பதாக தகவல்கள் வந்தனர்.
இதனை அடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடிய சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் பள்ளியின் வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்தார். சேதமடைந்த பகுதிகளை செப்பனிட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி சியா வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.