திருத்துறைப்பூண்டி, செப். 11: திருத்துறைப்பூண்டி தாலுகா விளக்குடி வீரட்டேஸ்வரர் வகையறா பூர்ணாம்பிகை புஷ்கலாம்பிகா சமேத வண்ணமுடையப்ப ஐயனார் கோயில் புனரவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், கணபதி ஹோமம் , நவகிரக ஹோமம் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 2ம் கால பூஜை விமானம் கலசம் வைத்தல் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை 9ம் தேதி காலை 3ம் யாக கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. 10ம் தேதி 4ம் கால யாக பூஜை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ந்து கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்ட புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வண்ணமுடையப்ப அய்யனார் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் செயல் அலுவலர் முருகையன், ஆய்வாளர் ராஜேந்திர பிரசன்னா, கணக்கர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி போலீசார் செய்திருந்தனர்.