Saturday, June 1, 2024
Home » திருத்தங்கல் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்-ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

திருத்தங்கல் சாலையில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்-ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

by kannappan

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சி உள்ளது. சிவகாசியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருத்தங்கல் வழியாகத்தான் சென்று வரமுடியும். திருத்தங்கல்லில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள மெயின்ரோட்டு சாலை கடும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இந்த மெயின் சாலையை பள்ளி, கல்லூரி வாகனங்கள், தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் வாகனங்கள், ஆயிரக்கணக்கான டூவீலர்கள் தினமும் இருமார்க்கமாக பயன்படுத்தி வருகின்றன. இதனால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை அகலப்படுத்தப்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், விபத்து நடப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் திருத்தங்கல் நுழைவு பகுதியில் ரயில்வே கேட் உள்ளதால் ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரும் நெருக்கடியில் இந்த சாலை சிக்கி தவிக்கின்றது. சாலைக்கேற்ற வகையில் வாகன ஓட்டிகளும் மெதுவாக செல்வது கிடையாது. வாகன ஓட்டிகள் முந்தி செல்ல முயல்வதால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.இந்த சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். மேலும் நகரின் மைய பகுதியான அண்ணா சிலை பஸ் ஸ்டாப் எதிர்புறம் முழு ஊரடங்கின் போது போலீசாரால் அமைக்கப்பட்ட தற்காலிக செட் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் எம்.புதுப்பட்டி, எரிச்சநத்தம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தற்காலிக செட் எடுக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே சாலையை போர்க்கால அடிப்படையில் விரிவுபடுத்த வேண்டும், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

twenty − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi