Thursday, May 9, 2024
Home » திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

by Mahaprabhu

திருத்துறைப்பூண்டி, டிச. 29: திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு சான்றிதழை வழங்கி எஸ்பி ஜெயகுமார் பாராட்டு தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி நகரம், ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள உரக்கடையில் பூச்சி மருந்து வாங்குவது போல் நடித்து உரக்கடையின் உரிமையாளர் சரவணபவன் (53) என்பவரை கடந்த 24ம் தேதி இரவு கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த ரொக்கம் ரூ.65000 மற்றும் ரூ.18000 மதிப்புள்ள செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக சரவணபவன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் கழனியப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் , எஸ்.ஜ.முத்துக்குமார். ஏட்டுகள் கணபதி, கணேஷ், தேவகுமார். தேவதாசன், காவலர்கள் பாலமுருகன், சக்திவேல், ஊர்காவல்படை வீரர் பரணிதரன் கொண்ட குழுவினர் சுஜிலி (எ)சாம்ராஜ் (28) என்பவரை விரைந்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மீட்டு தலை மறைவுமான அஜித்குமார் என்பவரை தேடி வருகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் 9 பேருக்கு எஸ்.பி.ஜெயகுமார் நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi