திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 3 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் காலை 5 முதல் இரவு 7 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்கத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்ப்பட்டுள்ளதுடன் அபிஷேகத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. …