விருதுநகர், மே 6: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக திருச்சுழி பகுதியில் 87 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. காரியாபட்டி, திருச்சுழி, பிளவக்கல் அணை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சுழியில் 87 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: அருப்புக்கோட்டை 27, விருதுநகர் 0.80, திருச்சுழி 87, காரியாபட்டி 12.60, வத்திராயிருப்பு 4.20, பிளவக்கல் 38.20, கோவிலாங்குளம் 37.