சமயபுரம்: திருச்சி அருகே திருநங்கை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த மேல காவல்கார தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மணிமேகலை (28). திருநங்கையான இவர், கடந்த 10 ஆண்டுகளாக மண்ணச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் மணிமேகலை நேற்று இரவு நம்பர் 1 டோல்கேட் பகுதியில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே உள்ள வாழவந்தபுரம் ஒட்டியுள்ள தென்னந்தோப்பில் கழுத்தறுக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.