திருக்கழுக்குன்றம்: பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழுக்களாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 90 நாட்கள் தங்கி விவசாயிகளுடன் ஒன்றிணைந்து வேளாண் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வேளாண் மாணவிகள் நித்திய , காவியா, ஜனனி, மனிஷா, நந்தினி ஈஸ்வரி, அனுபிரியா, நிஷா, கோமளா ஆகிய 8 மாணவிகள் குழு திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் தங்கி விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 10 நாட்கள் அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால் தானம் அறக்கட்டளை என்ற நிறுவனத்துடன் இணைந்து பொன் பதர் கூடம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி,தானம் அறக்கட்டளையின் சுகாதார பணியாளர் தமிழ் செல்வி மற்றும் களஞ்சியம் நிறுவன உறுப்பினர்கள் கலைச்செல்வி, ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்….