வந்தவாசி: வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 29ம்தேதி கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். பின்னர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர், மாணவியின் தாய் தெள்ளார் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து மாணவி கடத்தப்பாட்டாரா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர். அண்ணாமலையார் கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
இன்றும் சிறப்பு, அமர்வு தரிசனம் ரத்து தொடர் விடுமுறையால் பக்தர்கள் திரண்டனர்.