தோகைமலை: கடவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக பூத் கமிட்டி, நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் கடவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக முகவர்கள் பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கான (பிஎல்ஏ2) ஆய்வு கூட்டம் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். காணியாளம்பட்டி கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கடவூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கன்னியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், அமுல்ராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜேந்திரன், கருணாநிதி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாமக்கல் ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆய்வுக் கூடம்
previous post