நெல்லை, பிப்.21: மானூர் ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் பாம்பே சுந்தரம் 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கங்கைகொண்டானில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் அவரது படத்திற்கு மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி மாலை அணிவித்து திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மூத்த முன்னோடி மாயாண்டி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்பிஎன் சின்னத்துரை, சங்கரன், வேல்ராஜ், புங்கனூர் அந்தோணிசாமி, வெங்கடாசலப்புரம் முத்துப்பாண்டி, பாம்பே சுந்தரம் மகன் அப்பு மற்றும் ஏகேஎம் கீர்த்தி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக கொடியேற்று விழா
previous post