சேந்தமங்கலம், ஏப்.13: சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி ஊராட்சியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் சரசு திராவிடமணி முன்னிலை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தபாபு, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர் கனகராஜ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வராசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு
previous post