லால்குடி, மே 8: லால்குடி அருகே புள்ளம்பாடியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. புள்ளம்பாடியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.மத்திய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் வைரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஒன்றிய அவைத் தலைவர் எலியாஸ், ஒன்றியகுழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் ஆலீஸ் செல்வராணி, கல்லக்குடி நகர செயலாளர் துரை, இளைஞரணி செளந்தரபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் அந்தோணிசாமி, முன்னாள் பெருந்தலைவர் பத்மா மருதை, தலைமை கழக பேச்சாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை குறித்து விளக்கிப்பேசினர்.
பொதுக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், பெரியசாமி, முத்துசாமி, ராஜமாணிக்கம், குமார், யாக்கோபு மாவட்ட கவுன்சிலர் பால வினோதினி செந்தில், மற்றும் ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றதலைவர்கள், புள்ளம்பாடி, கல்லக்குடி ஒன்றிய பேருர் கழக, கிளை கழக,நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி ராமர் நன்றி கூறினார்.