திருத்துறைப்பூண்டி, மே 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு ஊராட்சி கடைத்தெரு மற்றும் மேலமருதூர் ஊராட்சி செங்கதல பாலம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான இடத்தை ஒன்றியக்குழுத் தலைவர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் இரவி, ஒன்றிய பொறியாளர்கள் சூரியமூர்த்தி, சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் தமயந்தி, சுஜாதா, ஒன்றிய கவுன்சிலர் இந்திரா, மாரியம்மாள், ஊராட்சி தலைவர்கள் மாலினி ரவிச்சந்திரன், மாரிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.