சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் மா.சுப்பிரமணியன், நேற்று காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை, 172அ வட்டத்திற்கு உட்பட்ட கழிக்குன்றம் பிரதான சாலை தொடங்கி திருவீதியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, அறிஞர் அண்ணா தெரு, பள்ளிப்பட்டு பிரதான சாலை, பஜனை கோயில் தெரு, எத்திராஜ் தெரு, ஸ்ரீராம் 1, 2, 3, 4, 5, தெரு, ஸ்ரீராம் நகர் பிரதான சாலை, கந்தசாமி தெரு, சி.எல்.ஆர். ஊழியர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, அவை அனைத்தையும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் விரைந்து செயல்படுத்துவேன் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் ஏழு உறுதிமொழிகளான அனைவருக்கும் உயர்தரக்கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத்தரம், குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி, வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு என வளமான தமிழகத்தின் விடியலுக்கான திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறினார்.சைதை கிழக்கு பகுதி கழக செயலாளர் இரா.துரைராஜ், பகுதி நிர்வாகிகள் கோட்டூர் கோ.சண்முகம், இ.முருகேசன், எஸ்.ரவி, எஸ்.ஜே.சலாம், வட்டச் செயலாளர்கள் ஆர்.ராஜ்குமார், க.மணி, வட்ட நிர்வாகிகள் எம்.பாலகிருஷ்ணன், நரசிம்மன், கருணா, சிவலிங்கம், எம்.குமார், ராஜன், பழனி, வரதன், மு.பலராமன், முத்துசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நேற்று கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழத்திற்கு அருகில் அமைந்துள்ள கிண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்….