காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சர்வதீர்த்தம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (60). எலக்ட்ரீஷியன். திமுக பிரமுகர். சந்தானத்துக்கு இதய நோய் உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் பிரசார கூட்டம் நடந்தது. இதில், சந்தானம் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட சந்தானத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த போலீசார் சந்தானத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சந்தானத்தை பரிசோதித்த டாக்டர்கள். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்….