தா.பழூர், செப்.21: அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் கடந்த 18ம் தேதி கிராமங்கள் தோறும் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு அவதாரங்களில் விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதனை பொதுமக்கள் வழிபாடு செய்து வந்த நிலையில் சிலையை கரைப்பதற்கு தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலால், அர்த்தனேரி, அணைக்குடம், நாயகனைப்பிரியாள், சிந்தாமணி, காசாங்கோட்டை, சீனிவாசபுரம், காரைக்குறிச்சி, மதனத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தா.பழூர் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.