தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பள்ளி மாணவர்களிடையே போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமலும், வீட்டில் இருக்கக்கூடிய சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மது பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கவும், பள்ளி மாணவிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்னை குறித்து உடனே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவுரை வழங்கினர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தா.பழூர் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
previous post