தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தா.பழூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், பொய்யாமொழி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைத்து முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உட்கட்டமைப்பு பற்றிய உள்ளாட்சி பிரதிநிதிகளூடன் பயிற்சி நடைபெற்றது.
தா.பழூரில் பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
previous post