திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 3-ம் மண்டலம் 47வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சி நிதியில் ரூ.57.50 லட்சம் மதிப்பீட்டில் தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் சாலை மறுசீரமைப்பு பணிகளை திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான க.செல்வராஜ் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மண்டலத் தலைவர் கோவிந்தசாமி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், வட்டக் கழக செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன், கவுன்சிலர்கள் ஜெயசுதா பூபதி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.