Sunday, June 16, 2024
Home » தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜுக்கு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு

தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு திமுக வேட்பாளர் காமராஜுக்கு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு

by kannappan

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜ், வார்டு முழுவதும் உள்ள பொதுமக்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி, 49வது வார்டுக்கு உட்பட்ட தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளை  நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது வியாபாரிகள் அவருக்கு மாலை, சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்தரமாக கடைகள் அமைத்து தர வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது பதிலளித்த காமராஜ், தற்போது திமுக ஆட்சி அமைத்த நாள்முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கைகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். அப்போது, எங்கள் அனைவரின் வாக்குகளும் உதயசூரியன் சின்னத்திற்கே என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 49வது வட்ட திமுகவினர் ஏராளமானோர் உடனிருந்தனர்….

You may also like

Leave a Comment

seventeen + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi