Tuesday, May 28, 2024
Home » தாம்பரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்: பல்லாவரம் எம்எல்ஏ வழங்கினார்

தாம்பரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்: பல்லாவரம் எம்எல்ஏ வழங்கினார்

by Karthik Yash

தாம்பரம், ஆக.12: அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கலந்துகொண்டு, பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் 198 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, தனது சொந்த நிதியிலிருந்து ₹10,000, ₹7000, ₹5000 வீதம் ₹44 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டினார்.

மேலும், அடுத்த ஆண்டிலிருந்து 450 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசு, கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும் என ஊக்கப்படுத்தினார். அப்போது மாணவ, மாணவிகளை அதிக மதிப்பெண் எடுப்பதற்கு ஊக்குவித்த 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து இ.கருணாநிதி எம்எல்ஏ கவுரவித்தார். நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் கருணாகரன், தலைமை ஆசிரியர் சந்திரன், மாமன்ற உறுப்பினர் சரண்யா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜ், க.ரமேஷ், காரை செல்வராஜ், மதுரைவீரன், இளவரசன், பாஸ்கர், டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi