தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பாஜ மூத்த தலைவரும் முன்னாள் மாநில தலைவருமான இல.கணேசன் நேற்று தாராபுரம் அண்ணா சிலை அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:பொதுவாக தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளரை புகழ்ந்து அவர் உங்கள் வீட்டு பிள்ளை எங்கள் வீட்டுப்பிள்ளை அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாம் எனக் கூறுவார்கள். ஒரு பெண் என்னிடம் கேட்டார். ஒரு வேட்பாளரிடம் பிரச்னை ஒன்றுக்காக இரவு நேரத்தில் சென்று அவர் வீட்டுக் கதவைத் தட்டினால் அவர் நிதானத்துடன் இருப்பார் என்பதற்கு உறுதி கொடுப்பீர்களா? என்று கேட்டார்.அதற்கு இரவு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீட்டின் கதவைத் தட்டி முருகனிடம் நீங்கள் உதவியைக் கேட்கலாம். அவர் விழிப்போடு இருப்பார் நிதானத்துடன் இருப்பார். தாமரை எப்போதும் தண்ணீரில்தான் இருக்கும். ஆனால் எங்கள் வேட்பாளர் முருகன் தண்ணீரில் மிதக்கமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்….