Tuesday, May 7, 2024
Home » தவளக்குப்பம் அருகே சோகம் வேலை கிடைக்காததால் பட்டதாரி பெண் தற்கொலை

தவளக்குப்பம் அருகே சோகம் வேலை கிடைக்காததால் பட்டதாரி பெண் தற்கொலை

by Francis

 

தவளக்குப்பம், ஜூன் 11: புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கந்தசாமி நகரை சேர்ந்தவர் சுகுமார் (68). மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் முரளி, தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது பெரிய மகள் லலிதா (40), பட்டதாரியான இவரை கடந்த 2010ம் ஆண்டு லாஸ்பேட்டை அசோக் நகரில் வசிக்கும் வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 12 வயதுள்ள 7ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் லலிதா, படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று அவ்வப்போது மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தந்தை சுகுமார் லாஸ்பேட்டைக்குச் சென்று இரவு 11 மணிக்கு மகள் லலிதாவை தவளக்குப்பம் வீட்டிற்கு அழைத்து வந்தார். லலிதா இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார். காலையில் பார்த்தபோது, பக்கத்தில் உள்ள அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்ததது கண்டு அதிர்ச்சி அடைார். இது குறித்து சுகுமார், தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ திருமுருகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

You may also like

Leave a Comment

eleven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi