மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தலையாமங்கலம் தெற்கு தெரு வில் வசிப்பவர் சிவ சுப்பிரமணி யன் (65). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். இவர் பழமையான ஒட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை வெளி யே நின்று கொண்டிருந்தார்.அப்போது காம்பவுண்டு சுவர் ஓரமாக ஊர்ந்து வந்த சுமார் 8 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று இவரை பார்த்து படம் எடுத்து சீறியது. பின்னர், மழை நீர் சேகரிப்பு குழாய்க்குள் புகுந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவசுப்பிர மணியன் பாம்பு பாம்பு என சத்தம் போட்டார். இதையடுத்து கிராம மக்கள் மன்னார்குடி தீயணைப்பு அலுவலகத்திற்கு தக வல் கொடுத்தனர்.. நிலைய அலுவலர் பாலசுப்ர மணியன், சிறப்பு நிலைய அலுவலர் சம்பத் குமார், சக்திவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இட த்துக்கு வந்து 8 அடி நீள நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து ஒரு பையில் போட்டு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்….