தோகைமலை, ஏப். 3: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இனாம்குளத்தூர் பகுதி செவகாட்டுப்பட்டி ராஜேந்திரன் என்பவரின் தந்தை நல்லையன் (79). இவர் தோகைமலை காவல் சரகம் பில்லூரில் உள்ள ஒரு தரிசு காட்டில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் வந்து உள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை செய்து உள்ளனர். விசாரணையில் இறந்துகிடந்த முதியவர் மேற்படி மனநலம் பாதிப்பில் இருந்து வந்த நல்லையன் என்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.