கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு அணைக்கூட கட்டப்படவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “எல்லோரும் கொரோனா அச்சத்தில் இருந்த போது கொரோனாவிற்கு பயப்படாத ஒரே நபர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” என்று பாராட்டினார்.அவரை பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்திய போது நான் முன்னின்று பணி செய்தால் தான் அனைவரும் பணியாற்ற முன் வருவார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்ட துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியை விட்டு சென்ற போது, அரசுக்கு ஒன்றேகால் லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்ததாகவும், பின்னர் வந்த அதிமுக ஆட்சி முடிவில் 7 லட்சம் கோடி கடன் வைத்து சென்றுள்ளதாக சாடினார்.அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை எனக்கூறிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 15 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்த தன்னாலயே கடந்த ஆட்சியில் என்ன செய்து வைத்துள்ளார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சாடினார்….
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு அணைக்கூட கட்டப்படவில்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
previous post