Tuesday, May 21, 2024
Home » தமிழகம் முழுவதும் 17 போலீஸ் எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

தமிழகம் முழுவதும் 17 போலீஸ் எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களுக்கும் அதிகாரிகள் நியமனம்

by kannappan

சென்னை: தமிழகம் முழுவதும் 17 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை(தெற்கு) போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த குமார், மாற்றப்பட்டு தாம்பரம் நகர போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த சிபி சக்கரவர்த்தி, தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், சிபிசிஐடி எஸ்பி மூர்த்தி, தாம்பரம் தலைமையிடம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராகவும், மதுவிலக்குப் பிரிவு எஸ்பி சுப்புலட்சுமி, தாம்பரம் மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், அம்பத்தூர் துணை கமிஷனராக இருந்த மகேஷ், ஆவடி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை(மேற்கு) போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த அசோக்குமார், ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராகவும், மதுவிலக்குப் பிரிவு எஸ்பியாக இருந்த பெருமாள், ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், கோவை புதூர் பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருந்த உமையாள், ஆவடி தலைமையிடம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராகவும், மதுரை மதுவிலக்குப் பிரிவு எஸ்பியாக இருந்த மகேஷ்வரன், சென்னை மதுவிலக்குப் பிரிவு எஸ்பியாகவும், அண்ணாநகர் துணை கமிஷனராக இருந்த தீபா கனீகர், புதுடெல்லி 8வது பட்டாலியன் கமாண்டன்ட்டாகவும், அந்தப் பதவியில் இருந்த செந்தில்குமார், கோவை புதூர் கமாண்டன்ட்டாகவும், சென்னை நகர நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராக இருந்த மகேந்திரன், அடையாறு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னை(வடக்கு) போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பிரதீப், சென்னை மவுண்ட் துணை கமிஷனராகவும், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த சிவபிரசாத், அண்ணாநகர் துணை கமிஷனராகவும், மவுண்ட் துணை கமிஷனராக இருந்த அருள் பாலகோபாலன், சைபர் கிரைம் எஸ்பியாகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன், சென்ைன நகர உளவுத்துறை துணை கமிஷனராகவும், வேலூர் கூடுதல் எஸ்பியாக இருந்த ஆல்பர்ட் ஜான், பதவி உயர்வு பெற்று சென்னை(வடக்கு) போக்குவரத்து துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்….

You may also like

Leave a Comment

6 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi