சென்னை: தமிழகத்தில் நேற்று 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 82,053 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,051 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 34 லட்சத்து 43 ஆயிரத்து 980 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 3,561 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 33 லட்சத்து 87 ஆயிரத்து 839 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,164 ஆக உள்ளது.மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் நேற்று உயிரிழந்தனர்….