சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 57 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,15,136 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 37 பேர், செங்கல்பட்டு 5 பேர், காஞ்சிபுரம் 3 பேர், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கோவை, ஈரோடு, சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 25 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை….