Monday, June 17, 2024
Home » தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,290 பேருக்கு கொரோனா உறுதி; 12 பேர் உயிரிழப்பு – சென்னையில் ஒரே நாளில் 1,188 பேருக்கு தொற்று: சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,290 பேருக்கு கொரோனா உறுதி; 12 பேர் உயிரிழப்பு – சென்னையில் ஒரே நாளில் 1,188 பேருக்கு தொற்று: சுகாதாரத்துறை

by kannappan

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 92 ஆயிரத்து 780 (8,92,780) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், * தமிழகத்தில் மேலும்  3,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,92,780 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,715 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,61,424 குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,750 ஆக  உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 4; தனியார் மருத்துவமனையில் 8 என 12 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 1188 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 251141- பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,97,67,310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 86,066 மாதிரிகள்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 18,606 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,38,978 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,899 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,53,766 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,391 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை  யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* ஆந்திரபிரதேசம்  -4* அசாம் -1*ஜார்கண்ட்- 1* தெலுங்கானா – 1* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.*கத்தார்-1…

You may also like

Leave a Comment

twelve + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi