சென்னை: தன் மீது தொடுத்திருக்கும் குற்றச்சாட்டுகளை சைதை துரைசாமி நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுவதாக சைதை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பகிரங்க சவால் விடுத்துள்ளார். சென்னை சைதாபேட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் ம.சுப்பிரமணியன் திமுக தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தன நண்பர் ஜம்புலிங்கம் தனக்கு வாங்கித் தந்த லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டில் தான் கடந்த 1996-ம் ஆண்டு முதல் குடியிருப்பதாக கூறினார். மேயர் தேர்தலில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்திலையும் அதையே குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை நான் அபகரித்துவிட்டதாக சைதை துரைசாமி ஆதாரமற்ற தகவலை பரப்பிவருவதாக கூறினார். பொய்யான ஆவணங்களை வழங்கி என் மனைவி பெயரில் நிலம் வாங்கியதாக கூறும் அவர் ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுவதாக சவால் விடுத்தார். இதுகுறித்து சைதை துரைசாமியுடன் தான் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விளக்க அவர் தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். …