Sunday, May 19, 2024
Home » தனி அறையில் அடைத்து செவிலியர் மீது தாக்குதல் ஹோம் கேர் நிறுவன உரிமையாளர் கைது

தனி அறையில் அடைத்து செவிலியர் மீது தாக்குதல் ஹோம் கேர் நிறுவன உரிமையாளர் கைது

by kannappan

அண்ணாநகர்: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் ராஜா (39). இவரது மனைவி பிரபாவதி (35). இவர்கள், அதே பகுதியில் ஹோம்கேர் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இங்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுமதி (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி தாம்பரம் பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் குருபர்சிங் (51) வீட்டில் 4 நாட்கள் தங்கி, உடல் நலம் பாதிக்கப்பட்ட குருபர்சிங் மனைவிக்கு சிகிச்சை அளித்து சென்றார். மறுநாள் ராஜாவின் ஹோம் கேர் நிறுவனத்தை தொடர்புகொண்ட குருபர்சிங், ‘‘எங்கள் வீட்டில் வைத்திருந்த 11 சவரன் நகைகளை திடீரென காணவில்லை. அதை செவிலியர் சுமதி தான் எடுத்திருக்க வேண்டும்,’’ என தெரிவித்துள்ளார். இதுபற்றி ராஜா, சுமதியிடம் கேட்டபோது, நான் நகையை எடுக்கவில்லை, எனக்கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ராஜா, சுமதியை தனி அறையில் 4 நாட்களாக அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், உடனே அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு, மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய சுமதி, அரும்பாக்கம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில், 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையறிந்த ராஜா தலைமறைவானார். தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை அவரை கைது செய்தனர். …

You may also like

Leave a Comment

18 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi