நெல்லை, ஜூலை 14: நெல்லை அருகே மேலச்செவல் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (32). நெல்லையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் 11ம்தேதி சுத்தமல்லி தடுப்பணைக்கு பைக்கில் குளிக்கச் சென்றார். பைக்கை அங்கு நிறுத்திவிட்டு குளிக்கச் சென்றவர், திரும்பிவந்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து பைக்கை திருடிச்சென்றோரை தேடி வருகின்றனர்.