Sunday, June 9, 2024
Home » தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி திடீர் தற்கொலை

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி திடீர் தற்கொலை

by kannappan

பெரம்பூர்: தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயனாவரம் பி.இ.கோயில் தெருவை சேர்ந்தவர் கமல்ராஜ். வில்லிவாக்கத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தாட்சாயிணி, கடந்த 4 மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, கமல்ராஜ் தனது இரட்டை குழந்தைகளான பவதாரணி (16), பவன் கல்யாண் (16) ஆகியோருடன் வசித்து வந்தார். இருவரும் அயனாவரத்தில் உள்ள பள்ளி யில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று கமல்ராஜ் வழக்கம்போல் கடைக்கு சென்றுவிட்டார். பவதாரணி மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பினர். பிறகு, பவன்கல்யாண் மட்டும் டியூசனுக்கு சென்றார். பவதாரணி உடல்நிலை சரியில்லை என கூறிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், வேலை முடிந்து கமல்ராஜ் வீடு திரும்பியபோது, மகள் பவதாரணி படுக்கை அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மாணவியை மீட்டு பரிசோதனை செய்தபோது, அவர் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் அருகில் கிடந்த பாட புத்தகத்தை எடுத்து பார்த்தபோது, அதில், ‘i am going to death. it is all over finish’ என்றும், அதன் கீழ், கண்ணீர் அஞ்சலி பவதாரணி, எனவும் எழுதி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, ‘‘தாய் இறந்த சோகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என  விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

9 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi