சாத்தான்குளம், செப். 29: தட்டார்மடம் எஸ்.ஐ. குரூஸ் மைக்கேல் மற்றும் போலீசார் காந்திநகர் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படுக்கப்பத்து பகுதியில் இருந்து தட்டார்மடம் நோக்கி பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். இதில் அவர்கள் குலசேகரன்பட்டினம் கந்தசாமி மகன் சுடலைமணி (25), திசையன்விளை உறுமன்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பொன் சுடலை (25) என்பதும் 70 குவார்ட்டர் மதுபாட்டில், 15 ஆப் மதுபாட்டில்களை விற்பனைக்காக சாக்கு மூடையில் கட்டி பைக்கில் கடத்திச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து பைக்குடன் மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
தட்டார்மடம் அருகே பைக்கில் மது கடத்திய 2 வாலிபர்கள் கைது
previous post