தஞ்சாவூர், செப். 5: தஞ்சை மாநகராட்சி 30வது வார்டில் பட்டு நூல் கீழ ராஜ வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளால் நில அளவை செய்யப்பட்டது. மாநகராட்சி 30-வது வார்டு பட்டு நூல் கீழ ராஜ வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்காக சாலை சீர் செய்யப்பட்டது. இதற்காக கிருஷ்ணன் கோவில் முதல் தெருவிலும் கிருஷ்ணன் கோவில் நான்காம் தெருவிலும் பாதாள நீரோடையிலிருந்து அகற்றப்பட்ட மண் திட்டுகளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டது. பணியை மேற்கொள்ள உதவி புரிந்த ஆய்வாளர் செல்வமணி, மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் 30வது வார்டு பொதுமக்கள் சார்பாக மாமன்ற உறுப்பினர் கேசவன் நன்றி தெரிவித்தார்.
தஞ்சாவூர் பட்டுநூல் கீழ ராஜவீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நில அளவை
previous post