தஞ்சாவூர், மார்ச் 9: தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன், கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.பிக்கள், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர், டிகேஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக் குமார், ஜவாஹிருல்லா, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.