தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா நடைபெற்று வருகிறது. இங்கு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை 300-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் நலத்திட்ட விழாக்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.