தக்கலை, ஜன.31 : தக்கலை போலீஸ் உட்கோட்ட அளவிலான போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டி மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போலீஸ் தரப்பில் 4 அணியும், பொதுமக்கள் தரப்பில் 4 அணியும் மோதின. இப்போட்டியை தக்கலை டிஎஸ்பி உதய சூரியன் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் மூலச்சல் ஏ அணி முதலிடமும், போலீஸ் அணி இரண்டாம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு தக்கலை டிஎஸ்பி உதய சூரியன் பரிசுகளை வழங்கினார். தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து பாண்டியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.