திருப்பூர், ஜூன் 12: திருப்பூர், வீரபாண்டியை அடுத்த கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கெளதம் (21). டையிங் நிறுவன தொழிலாளி. திருமணமாகவில்லை. நேற்று வீட்டில் தனியாக இருந்த கெளதம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.