ஒட்டன்சத்திரம், ஏப். 4: ஒட்டன்சத்திரம் தும்மிச்சம்பட்டி புதுரை சேர்ந்தவர் ஆறுமுகம் (53). டெய்லர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரை ஜிஹெச்சில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆறுமுகம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். ஆறுமுகம் வீட்டில் வந்து பார்த்த போது சுமார் ஏழரை பவுன் தங்க நகை ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெய்லர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
previous post