துவரங்குறிச்சி: வளநாடு அருகே டெய்லர் கடையின் பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துவரங்குறிச்சி அடுத்த வளநாடு பகுதியை சேர்ந்தவர் மலர்விழி (30). இவர் டி. பொருவாய் பகுதியில் வாடகை கட்டிடத்தில் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டெய்லர் கடைடைய பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் நேற்று காலை கடையை திறப்பதற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த லேப்டாப் மற்றும் ரூ.38 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மலர்விழீ வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். டெய்லர் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டெய்லர் கடையில் பூட்டை உடைத்து லேப்டாப், பணம் கொள்ளை
previous post